அறந்தாங்கி, ஜூன் 15- புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பாக தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளைச் செயலாளர் யோகராஜ் தலைமையில் சிஐடியு கிளைச் செயலாளர் செந்தில் முன் னிலையில் ஆர்ப்பாட்டம் திங்களன்று நடைபெற்றது. தொழிலாளர்களுக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். கொ ரோனா தொற்று காலத்தில் பணிபுரி யும் பணியாளர்களுக்கு பணி சுழற்சி முறையை முறைபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.