tamilnadu

வெளிநாடு வாழ் தமிழர்களை அழைத்து வரக் கோரிக்கை  

அறந்தாங்கி, ஜூன் 7- புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கியில் வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு செலவில் அழைத்து வரக் கோரி ஞாயிறு அன்று மணிவிளான் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பொரு ளாளர் சேக் இஸ்மாயில் தலைமையில் மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி கோரிக்கை முழக்கமிட்டு பேசினார். மாவட்ட துணைச் செயலாளர் அஜ்மீர் அலி முன்னிலை வகித்தார். கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட மருத்துவ அணிச் செய லாளர் நாகூர் கனி, மாவட்ட தொழில்நுட்ப அணிச் செயலாளர் ஹாலித், ஒன்றிய செயலாளர் நோக்கியா சாகுல், ஒன்றிய துணைச் செயலாளர் நாகூர் கனி, நகர பொருளாளர் அப்துல் கரீம், நகர துணைச் செயலாளர் அப்துல் அமீது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக நகர செயலாளர் ஜகுபர் சாதிக் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் ஒளி முகம் மது நன்றி கூறினார்.