புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் வல்லவாரி (மேற்கு) பகுதியில் ஊரடங்கால் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் 100 குடும்பங்களுக்கு தேமுதிக சார்பாக அரிசி, காய்கறி ஆகியவற்றை தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை ஏற்று வழங்கினார். நிகழ்ச்சியில், தேமுதிக ஒன்றிய செயலாளர் ஏ.சசிக்குமார் மற்றும் நிர்வாகிகள் பிரதீபராஜ், சுதாகர், முத்து பழனி, வினாயகம், மாசிலாமணி, இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.