tamilnadu

பேருந்து ஓட்டுநர்களுக்கு நிவாரணம்

அறந்தாங்கி, மே 19- ஊரடங்கால் தனியார் பேருந்து ஓட்டுனர், நடத்துனர்  வேலை யிழந்து உணவுக்காக சிரமப்பட்டு  வருகின்றனர். இதில் அறந்தாங்கி யில் வேலையிழந்து தவித்து வரும் 200-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்து னர்களுக்கு அரிசி பை மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன. ரோட்டரி சங்கத் தலைவர் தங்க துரை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் அரிசிப் பை மற்றும் காய்கறிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் நகர கூட்டுறவு வங்கி தலைவர். ஆதிமோ கனக் குமார், ரோட்டரி சங்க நிர்வா கிகள் கராத்தே கண்ணையன், ஜனதாகண்ணன், கிருஷ்ணபவன் மோகன், சுப்ரமணியன், தாமஸ், புவனாசெந்தில், ஆத்மா மதி, மங்களம் ஸ்டோர் கனி கலந்து கொண்டனர்.