tamilnadu

img

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா இன்று தொடங்குகிறது நகர் முழுவதும் இருசக்கர வாகனப் பிரச்சாரம்

புதுக்கோட்டை, பிப்.13- நான்காவது புதுக்கோட்டை புத்த கத் திருவிழா இன்று புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் எழுச்சியுடன் தொடங்குகிறது.  புத்தகத் திருவிழா குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதற்காக வியா ழக்கிழமையன்று இருசக்கர வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. புதுக் கோட்டை நகர்மன்ற வளாகத்திலி ருந்து புறப்பட்ட பிரச்சாரப் பய ணத்திற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆரா ய்ச்சி நிறுவன மாவட்ட திட்ட ஒருங்கி ணைப்பாளர் முனைவர் ஆர்.ராஜ் குமார் தலைமை வகித்தார். பிரச்சாரப் பயணத்தை புதுக்கோட்டை நகர்மன்ற மேலாளர் கிருஷ்ணவேணி தொடங்கி வைத்தார். பிரச்சாரப் பயணத்தில் புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பா ளர்கள் நா.முத்துநிலவன், அ.மண வாளன், எல்.பிரபாகரன், எஸ்.டி.பால கிருஷ்ணன், கே.சதாசிவம், மு.முத்துக் குமார், எம்.வீரமுத்து உள்ளிட்ட நூற் றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். புத்தகத் திருவிழா சீருடை அணி ந்து, தலைக்கவசத்துடன் நடைபெற்ற இந்தப் பேரணி பிருந்தாவனம், அண்ணாசிலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், திலகர்திடல் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.  மேலும், புத்தகத் திருவிழா குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரி வித்ததாவது:  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நான்காவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா பிப்.14 முதல் 23-ஆம் தேதி வரை புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. 60-க்கும் மேற்பட்ட அரங்குகளில், 50-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் லட்சக்கண ககான புத்தகங்களை பார்வைக்கு வைத்துள்ளன. தினந்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வி யாளர்கள், ஆசிரியர்கள், மாண வர்களை பங்கேற்க வைப்பதற்கு விரி வான திட்டமிடல் செய்யப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழாவிற்கு வரு வோருக்கு குடிநீர், கழிப்பிட, சிற்றுண்டி உணவகம், ஓய்வு எடுப்பதற்கு என பல்வேறு வசதிகள் செய்து தரப்பட் டுள்ளது. தொடக்கவிழாவிற்கு கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகிக்கிறார். முதல் விற்பனையை மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் தொடங்கி வைக்கிறார். ‘கீழடி’ அரங்கத்தை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, குழந்தைகளுக்கான கோளரங்கத்தை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் பெ.வே.அருண்சக்தி குமார் தொடங்கி வைக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.