tamilnadu

புதுக்கோட்டை மற்றும் அரியலூர் செய்திகள்

விவசாயிகள் குறைதீர் கூட்டம்
புதுக்கோட்டை, ஜூலை 16- புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 19-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் ஆட்சி யர் பி.உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவ சாயிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று விவசாயம் தொடர்பு டைய கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு தெரி விக்கப்பட்டுள்ளது.

துப்புரவு தொழிலாளர்களுக்கு உபகரணம் வழங்கல்
அரியலூர், ஜூலை 16- அரியலூர் மாவட்டத்தில் ரோஸ் தொண்டு நிறுவனம் சார்பில் துப்புரவு தொழிலாளர்களுக்கு சீருடை, தலைக்கவ சம், கையுறைகள் வழங்கப்பட்டன. இதில் காவல்துறை ஆய்வாளர் ராஜ்மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தா னம், கிராம ஊராட்சி அலுவலர் சிவசங்கர் ஆகியோர் பங்கேற்றனர். ரோஸ் தொண்டு நிறுவன அறக்கட்டளை நிறு வனர் எம்.சக்திவேல் நன்றி கூறினார்.