புதுக்கோட்டை, ஆக.12- ஆதரவற்ற-மனநோயா ளிகள் இல்லாத மாவட்ட மாக புதுக்கோட்டை மாவட்ட த்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மா வட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடற்ற, ஆத ரவற்ற-மனநலம் பாதிக்க ப்பட்டவர்களுக்கு பாதுகா ப்பு, உணவு, உறைவிடம், மருத்துவம் மற்றும் மறு வாழ்வு சேவைகளை வழங்கு வதுடன், கூடுதலாக அத்த கையோரின் குடும்பத்தை கண்டறிந்து சேர்த்து வைப்பதற்கான ஒரு ங்கிணைந்த நடவடிக்கை கள் மக்கள் நல்வாழ்வுத்து றையால் எடுக்கப்பட்டு வரு கிறது. இதற்கென மாவட்ட மன நல திட்டத்தின் ஒரு பகுதி யாக ‘மனநோய் அவசர சிகி ச்சை மற்றும் மீட்பு மையம்” தொடங்கப்பட்டு புதுக்கோ ட்டை மரு.முத்துலெட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்து வமனை வளாகத்தில் 50 படு க்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு ஏற்படுத்தப்ப ட்டுள்ளது. கொரோனா பெரு ந்தொற்று காலத்தில் ஆத ரவற்ற மனநோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான பரிசோ தனைகள் செய்யப்பட்டு அனு மதிக்கப்படுவார்கள். எனவே, ஆதரவற்று வீடில்லாமல் சுற்றித் திரியும் மனநோயாளிகள் பற்றிய விவரங்களை 9486067686 என்ற அலைபேசி எண்ணில் மாவட்ட மனநல ஆலோ சனை மையத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.