tamilnadu

பொன்னமராவதி: மேலும் 3 பேர் கைது

புதுக்கோட்டை, ஏப்.28- புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில் கடந்த 17 ஆம் தேதி ஒருகுறிப்பிட்ட சமுதாய பெண்களை இழிவுபடுத்திபேசும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதனைக் கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக பொன்னமராவதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய தீவிரவிசாரணையில், தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டை மஞ்சவயல் கரிசல்காட்டைச் சேர்ந்தசெல்வகுமார் (34), வசந்த் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூரில், இந்த ஆடியோவை வெளியிட உதவியாக இருந்த புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் நெருச்சிப்பட்டியைச் சேர்ந்தசத்தியராஜ் (35) சனிக்கிழமை காலை சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தபோது, கைது செய்யப்பட்டார்.

;