புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அறந்தாங்கி உட்கோட்டம் சார்பாக போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு ஏற்படுத்த கூடைப் பந்தாட்ட போட்டி நடைபெற்றது. காவல் துணை கண்காணிப்பாளர் சி.கோகிலா தலைமை ஏற்று போட்டியை துவக்கி வைத்தார். காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.