tamilnadu

புதுக்கோட்டையில் ஓவிய, சிற்பக் கண்காட்சி கலைப் படைப்புகளை காட்சிப்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுக்கோட்டை, பிப்.26- புதுக்கோட்டையில் நடைபெற உள்ள ஓவிய, சிற்பக் கண்காட்சியில் கலைப்  படைப்புகளை காட்சிப்படுத்த விண்ணப்பிக்க லாம் என மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும், தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை ஓவிய, சிற்பக்க லைகளை மேம்படுத்திட பல்வேறு நடவ டிக்கைகளை எடுத்து வருகிறது. இத்துறை யின் கீழ் சென்னை, கும்பகோணம் ஆகிய  இடங்களில் உள்ள அரசு கவின் கலைக்க ல்லூரிகளும், மாமல்லபுரத்தில் சிற்பக்கல்லூ ரியும் இயங்கி வருகிறது. சிறந்த ஓவியம், சிற்பக்கலைஞர்களுக்கு கலைச்செம்மல் விருது வழங்குதல் மாநில அளவிலான ஓவிய,  சிற்பக் கலைக்காட்சி நடத்துதல், தனி நபர் கூட்டுக் கண்காட்சி நடத்திட நிதியுதவி வழங்கு தல் போன்ற பணிகள் கலை பண்பாட்டுத்து றையின் மூலம் நடைபெற்று வருகிறது. கலை பண்பாட்டுத்துறையின் ஏழு மண்டலங்களிலும் ஆண்டுதோறும் ஓவிய, சிற்பக் கண்காட்சி நடத்திட சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ள டக்கிய கலை பண்பாட்டுதுறையின் திருச்சி ராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் நடப்பாண்டின் கண்காட்சி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.  இக்கண்காட்சியில் பங்கு பெற விருப்பம்  உள்ள ஓவிய, சிற்பக்கலைஞர்கள் கண்கா ட்சியில் இடம் பெற தக்க கலைப்படை ப்புகளின் புகைப்படத்தினையும்  தங்கள் சுய  விவரக் குறிப்பினையும் மண்டல உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, நைட்சா யில் டெப்போ ரோடு, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம்,  திருச்சிராப்பள்ளி-620006 என்ற முகவரிக்கு 10.03.2020-க்குள் அனுப்பலாம்.  புகைப்படங்களின் அடிப்படையில் தெரிவு செய்த கலைப்படைப்புகள் உரிய  கலைஞர்களிடம் பெறப்பட்டு கண்காட்சி யில் வைக்கப்படும். மேலும், விவரம் வேண்டு வோர் கலை பண்பாட்டுத் துறையின் திருச்சி ராப்பள்ளி மண்டல அலுவலகத்தை 0431-2434122 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ள லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.