tamilnadu

குடிநீர் தொடர்பான பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க உத்தரவு

புதுக்கோட்டை, மார்ச் 11-  குடிநீர் தொடர்பான பணிக ளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் விநியோகத்தினை வழங்கு வது உள்ளாட்சி அமைப்புகளின் மிக  முக்கிய கடமையாகும். அந்த வகை யில் ஒவ்வொரு வாரமும் பொதுமக்க ளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோ கம் தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரியம் உள்ளிட்ட தொடர்பு டைய அலுவலர்களுடன் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய  அளவில் ஆலோசனைக் கூட்டங்கள்  நடத்தி அதன் விபரத்தினை அறிக்கை யாக அளிக்க அறிவுறுத்தப்பட்டு ள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட 497 கிராம ஊராட்சிகளில் குடிநீர் தேவையை கணக்கிட்டு சீரான  குடிநீர் வழங்கிடவும், கூடுதலாக குடி நீர் தேவை உள்ள இடங்களுக்கு புதி தாக மாற்று ஆழ்குழாய் அமைக்க  தேவையான நடவடிக்கை மேற்கொ ள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் காண ப்படும் முறையற்ற குடிநீர் இணைப்பு கள் விதிமுறைகளின் படி உடனடி யாக அகற்றப்படவும், இதுகுறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும்  வகையில் போதிய அளவு விளம்ப ரப்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டு ள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்ட த்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் கீர னூர், அன்னவாசல், இலுப்பூர், பொன்னமராவதி ஆகிய 4 பேரூராட்சி களில் தமிழ்நாடு குடிநீர் வடிகால்  வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டங்க ளின் கீழ் குடிநீர் விநியோகம் செய்ய ப்பட்டு வருகிறது. ஆலங்குடி, அரி மளம், கறம்பக்குடி மற்றும் கீரமங்களம் ஆகிய பேரூராட்சிகளில் பேரூராட்சிக்கு சொந்தமான குடிநீர்  ஆதாரங்கள் மூலம் குடிநீர் விநியோ கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக குடிநீருக்காக வழங்க ப்படுகின்ற நீரினை பொதுமக்கள் குடிநீர் உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நீரின் முக்கியத்துவத்தினை உணர்ந்து நீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த அனைவரும் முன்வர வேண்டும். காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் செயல்படுத்தப்பட்டு வரும்  பகுதியில் குழாய்களில் பழுது ஏற்படு வதை உடனுக்குடன் சரிசெய்திட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது. அதேபோன்று புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள மொத்தம் 42 வா ர்டுகள் அனைத்திலும் தினசரி குடி நீர் விநியோகம் வழங்கிட உரிய நட வடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறந்தா ங்கி நகராட்சியில் உள்ள மொத்தம் 27  வார்டுகளிலும் தினசரி குடிநீர் விநியோ கம் வழங்கப்பட்டு வருகிறது. இது போன்று மாவட்டத்தில் உள்ள அனை த்து குடிநீர் தொடர்பான பணிகளை யும் உடனடியாக பொதுமக்களின் பய ன்பாட்டிற்கு கொண்டு வரவும், புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது மக்களின் குடிநீர் தேவைக்கு முக்கிய த்துவம் அளித்து பணியாற்ற அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.