tamilnadu

ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்குக! உள்ளாட்சி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜூலை.15- புதுக்கோட்டை மாவட்ட கிராம பஞ்சா யத்து இணைப்புக்குழு (சி.ஐ.டி.யு.), மாவட்ட  உள்ளாட்சி தொழிலாளர் சங்கம் சார்பில்  பல்வேறு கோரி்க்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிடுவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி திங்கள்கிழமை மாநில தலைவர் ப.சண்முகம் தலைமையில் ஆட்சியர் அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவ லர்கள், முற்றுகையிட வந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் முற்றுகை போராட்டம் நடத்த வந்த வர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சி ஓ.டி.பி. இயக்குனர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியமும், பணிக்கொடை ரூ.50 ஆயி ரமும் வழங்க வேண்டும். பணி பதிவு செய்ய வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சி யர் அலுவலகத்தில் கொடுத்து விட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

;