tamilnadu

img

நல்லி– திசை எட்டும் மொழியாக்கப் போட்டி பரிசளிப்பு விழா

 புதுக்கோட்டை, அக்.1- புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் நல்லி- திசை எட்டும் இதழ் நடத்திய மாணவர்களுக்கான மொழியாக்கப் போட்டிகளுக் கான பரிசளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.  விழாவிற்கு பாரதி கல்வி நிறுவனங்களின் தலைவர் தனசேகரன் தலைமையேற்றார். பள்ளி, கல்லூரி, பொதுப் பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ஐந்தாயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக இரண்டாயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக இரண்டாயிரம் ரூபாயும், சான்றிதழ்களும் நினைவுப்பரிசு களும் நல்லி- திசை எட்டும் நிறுவனத்தால் வழங்கப்பட்டது.  விழாவில் நல்லி- திசை எட்டும் காலாண்டிதழ் ஆசிரியர் குறிஞ்சி வேலன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் நா.முத்துநிலவன், சாகித்ய அகாடெமி மேனாள் உறுப்பினர் கவிஞர் தங்கம் மூர்த்தி, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.  விழாவில் போட்டிகளுக்கான நடுவர்கள் பேராசிரியர் கணேசன், ஆசிரியர்கள் கஸ்தூரி ரங்கன், ஆன்டனி, மற்றும் சுப்ரமணி, சுதாகர், பீர்முகது, புதுகைப்புதல்வன், கீதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக வாசகர் பேரவை செயலர் சா.விஸ்வநாதன் வரவேற்க, காசாவயல் கண்ணன் நன்றி கூறினார். விழாவினை நல்லி குழுமத்தைச் சேர்ந்த பால்கி மற்றும் ஆசிரியை ஆனந்தி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.