tamilnadu

img

சிறுமி நரபலி விவகாரம்.... 5 பேர் கைது

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய நகர் பகுதியான கந்தர்வகோட்டைக்கு அருகே உள்ள நொடியூர் கிராமத்தில் கடந்த 18-ஆம் தேதி குளக்கரை அருகே ஆபத்தான நிலையில் சிறுமி (13 வயது)  ஒருவர் துடிதுடித்து உயிருக்கு  போராடிக் கொண்டிருந்தார். அதனை கண்டவர்கள் சிறுமியை தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பொழுதிலும் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்தார். 

இந்நிலையில் சிறுமியின் மரணம் குறித்து விசாரணை செய்ய 4 தனிப்படை அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். ஆனால் தீவிர விசாரணையால் சிறுமியின் தந்தையே மகளை கொன்றது தெரியவந்ததை அடுத்து தந்தை பன்னீர் மற்றும் அவரது உறவினர் குமார் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில் பெண் மந்திரவாதி உட்பட மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

என்ன காரணம்...
உயிரிழந்த சிறுமியின் தந்தைக்கு மூன்று மகள்கள். கைது செய்யப்பட்ட பெண் மந்திரவாதி,"மூன்றாவது மகளை நரபலி செய்துவிட்டால் உங்களுக்கு அதிக செல்வம் சேரும்" எனக் கூறியுள்ளார். அவரது ஆலோசனையின் பேரிலேயே பன்னீர் தனது மூன்றாவது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். தற்போது பெண் மந்திரவாதியிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;