புதுக்கோட்டை, பிப்.4- புதுக்கோட்டை மாவட்ட ஓய்வூதியர் சங்கத்தின் செயற்குழுக்கூட்டம் மாவட்டத் தலைவர் மு.முத்தையா தலைமையில் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. செயலாளர் பி.ஆழ்வாரப்பன், பொருளாளர் முருகேசன் மற்றும் நிர்வாகி கள் என்.ராமச்சந்திரன், ராஜேந்திரசிங், மண வாளன், சதாசிவம், பிரபாகரன், வெள்ளைச் சாமி, கந்தசாமி மற்றும் வட்டார நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நல்ல லாபத்தில் இயங்கு வதோடு, அரசின் பல்வேறு நலத்திட்டங்க ளுக்கு உதவிவரும் பொதுத்துறை நிறுவன மான எல்ஐசியின் பங்குகளை தனியா ருக்கும் விற்கும் மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. மேலும், தனியாருக்கு விற்கும் முடி வை திரும்பப்பெறவும் வழியுறுத்தப்பட்டது. மேலும், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறவும், தன் பங்கேற்பு ஓய்வூதியத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய முறையே தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறை வேற்றப்பட்டன.