புதுக்கோட்டை, ஜூலை 20- புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தை அடுத்த வலை யம்பட்டியைச் சேர்ந்தவர் அழகப்பன்(27). இவர், கடை யக்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில் வியாழக்கிழமை இரவு சென்றார். அப்போது அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தின் மீது மோதி அந்த இடத்திலேயே உயிரி ழந்தார். இதுகுறித்து அரிமளம் காவலர்கள் விசாரிக்கின்றனர். கடையக்குடியில் இருந்து முனசந்தை செல்லும் சாலை சீரமைப்பு பணி நடைபெறுகிறது. இவ்வழியே சுமார் 10 இடங்களில் பாலங்கள் கட்டுமானப் பணி நடைபெறுகிறது. பாலம் கட்டும் இடங்களில் மாற்றுப்பாதை குறித்த அறி விப்பு, எச்சரிக்கை பலகை, பிரதிபலிப்பான்கள் போன்ற முன்னெச்சரிக்கை குறித்த எந்த பணியும் மேற்கொள்ளாததே இந்த உயிரிழப்புக்கு காரணம் என அப்பகுதியினர் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.