tamilnadu

புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் வருபவர்கள் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல்

புதுக்கோட்டை, மே 6- புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வெளி மாநிலம், வெளி மாவட்டத்திலிருந்து வருகை  புரிபவர்கள் 1077 அல்லது 04322-222207 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தக வல் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரி வித்துள்ளதாவது: கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக மாவட்டத்தில் 144 தடை யுத்தரவு பிறப்பிக்கப்பட்டு கொரோனா வை ரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தினைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்கள் பலரும்  சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.

இது குறித்த விபரங்கள் மாவட்ட நிர்வாகத்தால் முறையாக பதிவு செய்யப்பட்டு உரிய மருத்துவ பரிசோதனை மற்றும்  கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.  அந்த வகையில் தற்போதைய சூழ்நி லையில் சென்னை, கோயம்பேடு உள்ளிட்ட  வெளி மாவட்டங்களிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகைபுரிபவர்கள் தாங்க ளாகவே முன்வந்து 1077 அல்லது 04322-222207 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், வெளி மாநிலம் மற்றும் பிற மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகைபுரிபவர்கள் தங்கள்  வீட்டின் அருகில் இருப்பது தெரியவந்தால் மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் மேற்கண்ட கட்டணமில்லா தொ லைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.