tamilnadu

img

பள்ளி மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

அறந்தாங்கி, அக்.21- புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அரசு.ஆ.மே.நி.பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும்  பன்னி ரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நினைவாற்றலை வளர்த்து கொள்ளவும் தேர்வை மகிழ்வுடன் எதிர் கொள்ளவும் புத்தாக்க பயிற்சி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி (பொ) தலைமையாசிரியர் டி.தாமரைச்செல் வன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். நல்லாசிரியர் சிவகுமார் வர வேற்புரை நிகழ்த்தினார். ஜெய்சங்கர் உதவி தலைமையாசிரியர் முன்னிலை வகித்தார். இலக்கியா இரவிசங்கர் பள்ளிக்கு சில்வர் டிரம் ஒன்று வழங்கி சிறப்பித்தார். மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி யை பேராசிரியர் குருமூர்த்தி. வழங்கி னார். இதில் 300 மாணவர்கள் பங்கு பெற்று பயனடைந்தனர். நிறைவாக முது கலை வணிகவியல் ஆசிரியர்  கணேசன் நன்றி கூறினார்.