அறந்தாங்கி, அக்.5- புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அடுத்த நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டினம் அவுலியா நகர் பகுதியில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி தெருக்களில் குப்பைகள் தேங்கி அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது மேலும் வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் மழைநீர், கழிவு நீர் சாலைகளில் தேங்கியிருக்கிறது. இத னால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலுக்கு இப்பகுததியில் பல பேர் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வரு கின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்ச லுக்கு மரணம் அடைந்தான். அதே போல் உயிர்ச் சேதம் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்று ஜமாத் தலைவர் சையது முகமது, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் க.செல்வராஜ், சி.சுப்ர மணியன், ஒன்றியச் செயலாளர் நெருப்பு முருகேஷ், மீமிசல் கிளைச் செயலாளர் அமீர் உள்ளிட்டோர் கோபாலப்பட்டினம் பகுதியை பார்வை யிட்டு கொசுக்கள் உற்பத்தியாகும் கழிவு நீரை வெளியேற்றி துர்நாற்றம் வீசி கொண்டிருக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தி சாலைகளை உயரமாக அமைத்து மழைநீர் வடிகால் வசதி அமைத்து தர வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும் அப்பகுதி மக்களை டெங்கு உள்ளிட்ட காய்ச்சலிருந்து காப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று சம்பந்தப்பட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொண்டனர். மேலும் நட வடிக்கை எடுக்காத பட்சத்தில் வரும் 18-ம் தேதி அப்பகுதி மக்களை திரட்டி மறியல் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தனர்.