புதுக்கோட்டை, செப். 26- தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, புதுக்கோட்டையில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: தமிழக ஆளுநர் மதச்சார்பின்மை குறித் தெல்லாம் கருத்து தெரிவித்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான கருத்தாகும். இதற்கு ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கூட்டணி நிலைப்பாடு குறித்து தெளி வாகச் சொல்லிவிட்ட பிறகு, அவருக்கு கீழ் உள்ள வர்கள் சொல்வதற்கெல்லாம் கவலைப்பட வேண்டிய தில்லை.
பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகள் தரமானதாக, அடிப்படை வசதி களுடன் உள்ளன. தனியார் சட்டக் கல்லூரிகளை விடவும், பன்மடங்கு வசதியாக அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளன. முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு போடுவது என்பது ஊழல் தடுப்பு -கண்காணிப்புப் பிரிவு போலீசார் புகார்களை ஆய்வு செய்து எடுக்கப்படும் நடவடிக்கைதான் என்று தெரிவித்தார்.