tamilnadu

img

அரசுப் பள்ளியில் ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் திட்டம்

அறந்தாங்கி, அக்.24- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் சிலட்டுர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டாய்வு நடை பெற்றது. முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலெட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் கு.திராவிடச்செல்வம், பள்ளி துணை ஆய்வாளர் செல்வம், தாந்தாணி, சிதம்பரவிடுதி, மற மடக்கி மற்றும் கீழையூர் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதன்மைக் கல்வி அலுவலக மற்றும் மாவட்டக் கல்வி அலுவலக பணியாளர்கள் கலந்து கொன்டனர்.  மேலும் தலைமை ஆசிரியர் மற்றும் தேசிய பசுமை படை இணைந்து(ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்கள் மேலும் பள்ளியில் பரா மரிக்கப்படும் குருங்காடுகள், இயற்கைத் தோட்டம், மூலிகை தோட்டம் மற்றும் பூந்தோட்டத்தை பார்வையிட்டு அரசு பள்ளி களில் சிலட்டுர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்மாதிரியாகத் திகழ்கிறது என்றும் இதை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்கள். மேலும் தலைமை ஆசிரியர் பி.சுதாகர், பசுமை படை ஒருங்கிணைப்பாளர் கார்த்திக்கண்ணன் இதர ஆசிரியர்கள் பசுமை படை மாணவ, மாணவிகளை பாராட்டினார்கள்.