புதுக்கோட்டை:
முறைசாராத் தொழிலாளர்களுக் கான நலவாரியப் பயன்களை முழுமையாக வழங்கக்கோரி சிஐடியு தொழிற் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் திங்கள்கிழமையன்று தொழிலாளர் கள் உண்டு, உறங்கி காத்திருக்கும் போராட்டத்தை நடத்தினர்.கொரோனா கால நிவாரண உதவித்தொகையாக கட்டுமானத் தொழிலாளர் களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களும், இரண்டு மாதத்திற்கு தலா ரூபாய் ஆயிரமும், தையல் உள்ளிட்ட இதர முறைசாராத் தொழிலாளர்களுக்கு ரூபாய் ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்பட்டது. இந்த நிவாரணத் தொகைஅனைத்து முறைசாராத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படவில்லை. முறையாக பதிவை புதுப்பித்தவர் களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டது. பதிவை புதுப் பிக்காவிட்டாலும் அவர்களுக்கும் வழங்க வேண்டுமென அனைத்துதொழிற்சங்கங்களும் போராட்டங் களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், முறையாக பதிவைபுதுப்பித்தவர்களில் பலருக்கும் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என்றகுற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே,பதிவை புதுப்பித்துள்ள அனைவருக் கும் தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணப் பொருட்களும், நிவாரணத் தொகையும் வழங்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் திங்கள்கிழமையன்று புதுக்கோட்டை தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பாக உண்டு, உறங்கி காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு சிஐடியு மாவட் டத் தலைவர் கே.முகமதலிஜின்னா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர்ஏ.ஸ்ரீதர், பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் சி.அன்புமணவாளன், ரத்தினவேல், அழகப்பன்,மாரிக்கண்ணு, சீனிவாசன், சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.