tamilnadu

img

படகுகளுடன் தமிழக மீனவர்கள் 4 பேர் கைது

புதுக்கோட்டை,ஜன.19- புதுக்கோட்டை மாவட்டம் சனிக்கிழமையன்று காலை ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 96 விசைப்படகுகளில் மீன்துறை அலுவலக அனுமதியுடன் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.  நள்ளிரவு 2 மணியளவில் இலங்கை கடற்படை  ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப் படகை சுற்றி வளைத்து, சிறைப்பிடித்தனர். அந்த படகில் இருந்த பாரதி (வயது 30), அசோகன் (28), சக்தி குமார் (30), மணி (33) ஆகிய 4 பேரும், இந்திய கடல் எல்லையில்தான் மீன் பிடித்தோம் என்று கூறியுள்ளனர். ஆனால் எல்லை தாண்டி வந்ததாக கூறி அந்த படகில் இருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்களுக்கு சொந்தமான படகுகளுடன், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களுடன் இலங்கையில் உள்ள காங்கேசன் துறை முகாம் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

;