tamilnadu

img

ஓஎச்டி ஆப்பரேட்டர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் கோரி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, மார்ச் 17- கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆப்பரேட்டர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியமாக மாதம் ரூ.13 ஆயிரம், தூய்மை காவலர்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் வழங்கக்கோரி சிஐடியு சார்பில் திங்கள்கிழமையன்று புதுக் கோட்டையில் பேரணி– ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து அண்ணாசிலை, தெற்கு நான்காம் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கிராமப் பஞ்சாயத்து இணைப்புக்குழு (சிஐடியு) மாநிலத் தலைவர் ப.சண் முகம் தலைமை வகித்தார். பேர ணியை தொடங்கி வைத்து  சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் உரை யாற்றினார். கோரிக்கைகளை விளக்கி சி.அன்புமணவாளன், ஏ.திரவியராஜ் உள்ளிட்டோர் பேசினர்.