புதுக்கோட்டை, ஜூன் 15- கட்டுமானம் உள்ளிட்ட முறைசாராத் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவார ணமாக ரூ. 10 ஆயிரம் வழங்க வலியுறுத்தி புதுக்கோடடையில் கட்டுமானத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் திங்கள்கிழமை மனுக்கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமானத் தொழி லாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சி.அன்புமணவாளன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், தலைவர் க.முகமதலி ஜின்னா, சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எம்.ஜியாவுதீன், செயலா ளர் பி.பிச்சைமுத்து, தையல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சி.மாரிக்கண்ணு, ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் ஜி.சீனிவாசன் உள்ளிட்டோர் பேசினர். மாவட்ட தொழிலாளர் நலவாரிய அலுவ லகத்தில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்க ளை நிரந்தரப்படுத்த வேண்டும். கட்டுமானம் உள்ளிட்ட முறைசாராத் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன.
தஞ்சாவூர்
இதே போல் தஞ்சை மாவட்ட தொழிலா ளர் நலத் துறை உதவி ஆணையர் அலுவல கம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பி.என்.பேர் நீதி ஆழ்வார் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜ் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகரச் செயலாளர் என்.குருசாமி, கும்ப கோணம் நகரச் செயலாளர் செந்தில்குமார், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் இ.டி.எஸ்.மூர்த்தி, கே.அன்பு, கே.கல்யாணி, என்.வி. நாகேந்திரன், ஆர்.சேகர், கைத்தறி சங்க மாவட்டச் செயலாளர் சுப்புராமன், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர்கள் இ.முகம்மது சுல்தான், நாகநாதன், மாதர் சங்க தஞ்சை நகர செயலாளர் வசந்தி, ஆட்டோ சங்க நிர்வா கிகள் சுரேஷ், ஜோசப், சாமிநாதன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் நிறைவில் உதவி ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்
நாகை மாவட்டக் கட்டுமானத் தொழிலா ளர் சங்கம்-சி.ஐ.டி.யு. சார்பில் நாகப்பட்டினம் மாவட்ட நலவாரிய அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.செல்வராஜ் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் சீனி.மணி, கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிச் சிறப்புரையாற்றி னர். சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ஜே.ஏ.ரகுமான், மாவட்டத் துணைச் செயலா ளர்கள் ஆர்.ரவிச்சந்திரன், எஸ்.சந்தான கிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர் எம்.லெட்சுமணன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் சு.மணி, எம்.லெட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத் திற்குப் பின், தொழிலாளர்கள் ஒருங்கி ணைப்பு நல வாரிய மாவட்ட அலுவலரிடம் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனுவை அளித்தனர்.