tamilnadu

img

மீன் வியாபாரிகளின்  கோரிக்கையை ஏற்று தூய்மைப் பணி

 புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட மேல 3-ம் வீதியில் மீன் மார்க்கெட் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதாலும், ஆங்காங்கே சாலையில் மழைநீர் தேங்கி உள்ளதாலும் அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசியது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டையில் நடைபெற்ற மனுநீதி முகாமில் அமைச்சர் சி.விஜய பாஸ்கர், மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி ஆகியோரிடம் மீன் மார்க்கெட் பகுதியில் தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும் என மீன் வியாபார்கள் சங்கத்தினர் மனு அளித்து இருந்தனர்.  இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜீவா.சுப்பிரமணியன் தலைமை யிலான நகராட்சி அலுவலர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் மீன் மார்க்கெட் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் நகராட்சி அலுவலர்கள் அகற்றினார்கள். மேலும் மீன் மார்க்கெட் அருகே உள்ள மேலநைனாரி குளத்தையும் சுத்தம் செய்தனர்.