tamilnadu

மின்சாரம் தாக்கி ஊழியர் படுகாயம்

பொன்னமராவதி, மே 19- புதுக்கோட்டை பொன்னமராவதியில் திங்களன்று இரவு பலத்த இடி மின்னலுடன் வீசிய காற்றால் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. அதை சரி செய்யும் பணியில் பொன்னமராவதி மின் ஊழியர்கள் இரவு முதலே ஈடுபட்டு வந்தார்கள். இதில் பொன்னமராவதி பாண்டிமான் கோவில் தெருவில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காக சென்ற அரசமலை நல்லூரை சேர்ந்த பெரியய்யா (42) மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்தார். அவர், சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்திற்கு லைன் மேன் பற்றாக்குறையும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. எனவே அரசு உடனடியாக போதுமான லைன் மேன்களை நியமனம் செய்ய வேண்டுமென தொழிலாளர்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

;