tamilnadu

img

போஸ் நகரில் குடிநீர் குழாயை சரி செய்யக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, அக்.3- புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட போஸ்நகர் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழக்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போஸ்நகரில் உள்ள அனைத்துத் தெருக்களிலும் உள்ள குடிநீர்க் குழாயைச் சரிசெய்து அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும். பராமரிப்பில்லாத சிறு மின்விசைத் தொட்டியை சரிசெய்ய வேண்டும். எரியாத தெரு விளக்குகளை அனைத்தையும் சரிசெய்ய வேண்டும். பொது சுகாதாரத்தைப் பாதுகாத்திட கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். ரேசன் பொரு ட்கள் முறையாகக் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். பலவகையான புறம்போ க்குகளில் குடியிருந்து வரும் ஏழைகளுக்கு வகை மாற்றம் செய்து குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு போஸ்நகர் கிளைச் செயலாளர் ரா.சோலை யப்பன் தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.உடையப்பன், எஸ்.சங்கர், நகரச் செயலாளர் சி.அடைக்கலசாமி, நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் சண்முக பழனியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சலோமி, சி.மாரிக்கண்ணு, எஸ்.ஜனா ர்த்தனன், நகரக்குழு உறுப்பினர்கள் அ.முத்தையா, சு.யாசிந்த் உள்ளிட்டோர் பேசினர்.