tamilnadu

img

அடிப்படை வசதிகள் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜூலை 23-  புதுக்கோட்டை மாவட்டம் அன்ன வாசல் அருகே மலைக்குடிப்பட்டியில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  ஆச்சநாயக்கன்பட்டி சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவர், தண்ணீர் வசதி, சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். ஆச்ச நாயக்கன்பட்டிக்கு கால்நடை மருத் துவமனை அமைத்துத்தர வேண்டும். மலைக்குடி மக்களுக்கு சாக்கடை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ஐஓபி வங்கிக்கு தனிக்கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.கண்ணன் தலைமை வகித்தார். கே.ரெங்கசாமி, கே.பழனிக்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன் சிறப்புரை யாற்றினார்.  கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. சண்முகம், ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா, ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.சுப்பிரமணி உள் ளிட்டோர் பேசினர்.

;