பொன்னமராவதி, பிப்.23- புதுக்கோட்டை திருமயம் அருகே அரண்மனைபட்டியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட் டங்களை சேர்ந்த 48 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாட்டு வண்டியில் 17 ஜோடியும், சிறிய மாட்டு வண்டியில் 31 ஜோடியும் என இரு பிரிவுகளாக போட்டி நடை பெற்றது. 8 கிமீ தூரம் நடைபெற்ற பந்தயத்தில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.