அறந்தாங்கி, மார்ச் 12- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடை யார்கோவிலை அடுத்த பெருநாவலூ ரில் இயங்கிவரும் அறந்தாங்கி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருவ ள்ளுவர் அரங்கில் கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடை பெற்றது. கல்லூரி முதல்வர் இரா. கண்ணன் தலைமை ஏற்று துவக்கி வைத்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட கருத்தரங்கில் கொரோனா வைரஸ் பற்றியும் முன்னெச்சரிக்கை மற்றும் தற்காத்துகொள்ள வழிமுறை கள் பற்றியும் வட்டார மருத்துவ அலுவ லர் மரு.இராமசந்திரதுரை மற்றும் மரு த்துவர்கள் கருத்துரைத்தனர். மேலும் காணொலி காட்சி மூலமாக விளக்கம் அளித்தனர். இதில் கல்லூரி பேராசி ரியர்கள் மற்றும் சுகாதார துறை அலு வலர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியில் கொரோனா வைரஸ் விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் நா.தனராஜன் தலைமை வகி த்தார். ஊமத்தநாடு அரசு ஆரம்ப சுகா தார நிலைய மருத்துவ அலுவலர் வி.விஜ ய்ராம் விழிப்புணர்வு உரையாற்றினார். நோய்த் தடுப்பு முறைகளை விளக்கி பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் செயல் விளக்கம் அளித்தனர். இதில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
துறவிக்காடு
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள துறவிக்காடு ஏ.கே.என் திருமண மண்டபத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வட்டார மரு த்துவ அலுவலர் வி.சௌந்தர்ராஜன் தலைமை வகித்தார். பேராவூரணி வட்டா ரத்தைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி, நடு நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தனியார் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள், அங்க ன்வாடிப் பணியாளர்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி நாட்டுநலப்பணி திட்டம், இளை யோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்பு ணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடை பெற்றது. கல்லூரி முதல்வர் சுகந்தி தலைமை வகித்து பேரணியை கொடிய சைத்து தொடங்கி வைத்தார். கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணி பழைய பேருந்துநிலையம், அண்ணா சிலை, கீழராஜவீதி வழியாக நகர்மன்ற த்தில் நிறைவு பெற்றது.