புதுக்கோட்டை
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்கள் பிரநிதிகளின் எண்ணிக்கை நாள்தோறும் சராசரியாக உயர்ந்து வருகிறது. இதுவரை 31 எம்எல்ஏ-க்கள், 3 எம்பிக்கள் உட்பட 34 மக்கள் பிரநிதிகள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 5 மாநில அமைச்சர்களும் அடங்கும். சென்னை - சேப்பாக்கம் திருவல்லிக்கேணி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற நபர்களில் பெரும்பாலனோர் குணமடைந்துள்ளனர். சிலர் மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கன்னியகுமாரி எம்பி வசந்தகுமார் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அதிமுக எம்எல்ஏ ஆறுமுகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.