tamilnadu

img

இந்திய வாலிபால் அணி கேப்டனுக்கு பாராட்டு

புதுக்கோட்டை, ஜன.22- நேபாலில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டி யில் வாலிபால் பிரிவில் 8 நாடுகள் பங்கேற்றன. போட்டியின் இறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்திய வாலிபால் அணியின் கேப்டனாக புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், கோட்டைக்காடை சேர்ந்த விவசாயி சார்லஸ் மகன் ஜெரோம்வினித் இடம் பெற்று தெற்காசிய போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கத் தினை பெற்று தந்தார். தங்கப் பதக்கத்தினை வென்ற ஜெரோம்வினித்தை புதுக்கோட்டை ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி நேரில் திங்கள் கிழமை பாராட்டினார். மேலும், இந்திய பள்ளிகளுக்கு இடை யேயான மாணவியர் பிரிவில் கடற்கரை கையுந்துப் போட்டி யில் தங்கப் பதக்கம் வென்ற குழிபிறை இராமநாதசெட்டி யார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவி யர்களையும் பாராட்டினார். மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே. சரவணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் மாலதி, மீனாட்சி சொக்கலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;