தரங்கம்பாடி அருகேயுள்ள தில்லையாடியில் தியாகி.தில்லையாடி வள்ளியம்மையின் 106-ஆவது நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. நினைவு மண்டபத்திலுள்ள வள்ளியம்மையின் சிலைக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியர் பிரவீன்நாயர், கூடுதல் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாத், எம்.எல்.ஏ பவுன்ராஜ், சீர்காழி எம்.எல்.ஏ பாரதி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.