tamilnadu

பயிர் காப்பீடு செய்ய மறுக்கும் கூட்டுறவு சங்கங்கள், இ-சேவை மையங்கள்: சிபிஎம் கண்டனம்

புதுக்கோட்டை, ஜூலை 29- பிரதம மந்திரியின் திருந்திய பயிர்  காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்ய  கூட்டுறவு சங்கங்களும், அரசு இ-சேவை  மையங்களும் மறுப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின்  மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன்  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: 2020-21ஆம் ஆண்டு காரீப் பரு வத்திற்கு நெல், மக்காச்சோளம், நிலக்க டலை, உளுந்து, துவரை, சோளம், கம்பு,  எள், வெண்டை ஆகிய ஒன்பது பயிர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அறி விக்கை செய்தும், அக்ரிகல்சர் இன்சூ ரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட்  என்ற பயிர் காப்பீட்டு நிறுவனத்தை ஒது க்கீடு செய்தும் அரசாணை வெளியிடப்ப ட்டுள்ளது. நெல், மக்காச்சோளம், நில க்கடலை, உளுந்து, துவரை, எள், வெண்டை ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய இறுதிநாள் 31.07.2020 எனவும், சோளம், கம்பு ஆகிய பயி ர்களுக்கு பயிர் காப்பீடுசெய்ய இறுதி நாள் 15.8.2020 என மாவட்ட ஆட்சியர்  கடந்த ஜூலை 21 அன்று அறிக்கை வெளி யிட்டிருந்தார். மேற்படி காப்பீடு நிறுவ னமும் இது தொடர்பாக நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டு இருந்தது. பயிர்க் கடன்பெறும் விவசாயிகள் அந்தந்த வங்கிகளில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர்.

கடன் பெறாத விவசாயிகள் காப்பீட்டு நிறுவ னத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மை யங்கள் மூலமாகவோ, தொடக்க வேளா ண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலமாகவோ விருப்ப த்தின் பேரில் பதிவு செய்து கொள்ள லாம். எக்காரணத்தை முன்னிட்டும்  நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு பின் பயிர் காப்பீடு செய்பவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாது எனவும் அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகள் சம்ம ந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களை அணு கினால் இங்கே காப்பீடு செய்ய முடி யாது. பொது இ-சேவை மையத்திற்கு செல்லுமாறு தெரிவிக்கின்றனர். பொது இ-சேவை மையத்திலோ சம்மந்தப்பட்ட  வேளாண்மை  கூட்டுறவு சங்கங்க ளுக்கு செல்லுமாறு விரட்டியடிக்கின்ற னர். தனியார் இ-சேவை மையங்களிலும் பதிவு செய்ய மறுக்கப்படுகிறது. ஓரிரு மையங்களில் பதிவு செய்ய முன்வந்தா லும் காப்பீட்டுத் தொகையைவிட சேவை  கட்டணமாக பல மடங்கு பணம் கேட்ப தாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கால அவகாசம் வேண்டும்
இது விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலை யிட்டு சம்மந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்க ளிலும், பொது இ-சேவை மையங்களி லும் பயிர்காப்பீடு செய்ய உத்தரவிட வேண்டும். காப்பீடு செய்வதற்கான தேதி ஜூலை 31-க்குள் முடிவடைவதால் கால அவகா சம் போதாது. எனவே, காப்பீடு செய்வ தற்கான கால அளவையும் நீட்டித்து உத்தரவு வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் விவசாயிகளையும், விவ சாய அமைப்புகளையும் திரட்டி மிகப்பெ ரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.