பொன்னமராவதி, டிச.12- புதுக்கோட்டை பொன்னமராவதி யில் துப்புரவுத் தொழிலாளர்களின் சட்டப்பூர்வமான கோரிக்கைகளை பொன்னமராவதி பேரூராட்சி நிர்வாகம் நிறைவேற்ற வலியுறுத்தி புதுக் கோட்டை மாவட்ட உள்ளாட்சி துறை தொழிலாளர் சங்கம்- சிஐடியு பொன்ன மராவதி பேரூராட்சி கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர வளர்ச்சிக்கு ஏற்ற முறையில் காலிப் பணியிடங்களை நிரப்பி புதிய துப்புரவு தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க வேண்டும். அதற்கு போதுமான நிதியையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். துப்புரவு தொழிலாளர்களுக்கு வீடு கட்டி தரப் படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலை வர் என்.பக்ருதீன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் ஏ.தீன் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப.சண்முகம் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். சிஐடியு நிர்வாகிகள் கண்ணன், சுப்பிரமணி, அய்யாவு, ஒய்யம்மாள், சௌந்தரம், பஞ்சவர்ணம், சாத்தையா, வீராசாமி, முத்து நாச்சான் உள்பட திரளானோர் கலந்து கொண்ட னர்.