tamilnadu

img

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சனிக்கிழமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வாலிபர் சங்க புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் கர்ணா தலைமை வகித்தார். வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் சசிக்குமார், செயலாளர் கோபாலகிருஷ்ணன், வாலிபர் சங்க நிர்வாகிகள் கலாம், வசந்த், புதுமைராஜா, சங்கர் மற்றும் கல்லுரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

;