பொன்னமராவதி, மார்ச் 18- பொன்னமராவதி அருகே மேலத்தானியத்தில் குடியுரிமை பாதுகாப்பு பொ துக்கூட்டம் எஸ்டிபிஐ கட்சி யின் மேலத்தானியம் கிளை சார்பில் நடைபெற்றது. கூட் டத்திற்கு எஸ்டிபிஐ கிளை தலைவர் இப்ராஹிம்ஷா தலைமை வகித்தார். கிளை செயலாளர் சாதிக் அலி வர வேற்றார். மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்திய மாநில பொதுச்செய லர் முகைதீன் அப்துல் காதர், விமன்ஸ் இந்தியா மூவ்மெ ண்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மெஹ்ராஜ் பானு ஆகியோர் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விளக்கிப் பேசினர். மேலத்தானியம் ஜமாத் தலைவர் முகமது இப்ரா ஹிம், செயலர் அபிபுல்லா, பொருளர் தாஜூதீன், துணைத்தலைவர் இப்ராஜிம் ஷா, மேற்கு மாவட்டத்தலை வர் ஸலாஹூதீன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் விதைகள் கலைக்குழு சார்பில் கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது.