புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளயில் ஆலங்குடி ரோட்டரி சங்கம் சார்பில் மார்பகப் புற்றுநோய் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு ரோட்டடி சங்கத் தலைவர் ஆ.செல்வகணபதி தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் சு.மாரிமுத்து முகாமினை தொடங்கி வைத்தார். அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.திவ்யா புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகள் குறித்து பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.ஆர்.வவேல், துணைத் தலைவர் ச.சிங்காரம், தமுஎகச மாவட்டச் செயலாளர் சு.மதியழகன், கூட்டுறவு சங்க துணைத் தலைவர் சிவசங்க ரன் ரோட்டரி சங்க நிர்வாகிகள் செல்லத்தரசு, நடராஜன், சந்திரரேகரன், விக்னேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக ஆசிரியர் சித்திரா வரவேற்க, ரோட்டரி சங்கப் பொருளாளர் செல்வக்குமார் நன்றி கூறினார்.