tamilnadu

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

புதுக்கோட்டை,ஜூன் 30- கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தின் ஜெகதாபட்டினம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் தொடுத்துள்ளனர்.  இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி வந்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 4 பேரை தாக்கி அவர்களின் விசைப்படகுகளையும் சேதப்படுத்தியதாக மீன வர்கள் கூறுகின்றனர்.  தாக்குதலில் காயமடைந்த 4 மீனவர்கள் மணமேல்குடி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர்.

;