அறந்தாங்கி, ஆக.14- புதுக்கோட்டை மாவட்டம் ஆவு டையார்கோவிலை அடுத்த பெருநாவ லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காலை, மாலை என இரு பிரிவுகளாக பயின்று வரு கின்றனர். 2019- 2020-ம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் கடந்த ஜூன் மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த கல்வி ஆண்டு வரை பாரதிதாசன் பல்கலைக் கழக மாதிரிக் கல்லூரியாக செயல்பட்டு வந்த இந்த கல்லூரி இந்த கல்வி ஆண்டு முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாற்றப்பட்டு செயல்படு கிறது. தற்போது புதுக்கோட்டை மன்னர் கல்லூரி முதல்வர் சுகந்தி (பொ) முதல்வராக பெருநாவலூர் அரசு கல்லூரியை கூடுதலாக கவனித்து வருகிறார். அதேநேரம் இந்த கல்வி ஆண்டு வகுப்புகள் துவங்கியதில் இருந்து ஆசிரியர்கள் பற்றாக்குறையால் 5 மணி நேரம் நடக்க வேண்டிய வகுப்புகள் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம்தான் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடி கிறது. இதனால் எங்கள் படிப்பு வீணாகி றது. தினமும் கல்லூரிக்கு வந்தும் படிக்க முடியாமல் போகிறது. அதனால் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் பாடம் நடத்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி புதனன்று மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற் பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவுடையார்கோவில் போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் போராட்டம் நடத்திய மாணவர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை களை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்ப தாக கூறியதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.