tamilnadu

img

மாங்கோட்டை கூட்டுறவு வங்கியில் போலி ஆவணங்களை தயார் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எழுத்திடுக! சிபிஎம் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜூலை 20- புதுக்கோட்டை மாவட்டம் மாங்கோட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி யில் போலி ஆவணங்கள் தயார் செய்து மோ சடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்கு டியை அடுத்துள்ள மாங்கோட்டை கிரா மத்தில் உள்ளது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி. இந்த வங்கியில் போலி ஆவணங்களை தயார் செய்து கூட்டுறவு  சங்க நிர்வாகிகள் மோசடியில் ஈடுபட்டுள்ள தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலி ஆவ ணங்களை தயார் செய்த கூட்டுறவு சங்க நிர்வா கிகள் மீதும், உடந்தையாக இருந்த அதிகா ரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எம்.பாலசுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவ ட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர் வி.துரைச்சந்திரன், மாவட்ட க்குழு உறுப்பினர் எல்.வடிவேல் ஆகியோர் பேசினர்.