அறந்தாங்கி, ஜூன் 4- வாகன விபத்தில் இறந்த தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணியைச் சேர்ந்த கேமரா மேன் மற்றும் கேபிள் டிவி மெக்கானிக் பாலசுப்பிர மணியன் (42) குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது. அறந்தாங்கி ரோட்டரி கிளப் சார்பாக தலைவர் ஆடிட்டர் தங்கதுரை மற்றும் நிர்வாகி கள், இறந்த பாலசுப்பிர மணியன் மனைவியிடம் ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை வழங்கினர். மேலும் அறந்தாங்கி அனைத்து பத்திரிகையாளர் சார்பாக ரூ.5 ஆயிரம் நிதி வழங்கி உதவினர்.