அறந்தாங்கி, ஜூலை 22- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவ மனை சுற்றுச்சுவரை முறைகேடாக தனியார் இடிப்பதற்கு அனுமதித்த மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மருத்துவமனையை முற்றுகையிடும் போராட்டம் திங்கள் காலை நடைபெற்றது. வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் பா.சசிக்குமார் தலைமை யில் காந்தி பூங்கா சாலை சிபிஎம் அலுவலகத்தில் இருந்து அரசு மருத்துவமனையை நோக்கி கோஷங்கள் எழுப்பிய வாறு பேரணியாக மாவட்ட தலைவர் ஆர்.கர்ணா, செயலா ளர் துரை நாராயணன், விதொச மாவட்ட தலைவர் ஏ.பால சுப்பிரமணியன் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் தென்றல் கருப்பையா, நகர செயலாளர் தங்கராஜ், வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் சசிக்குமார், ஒன்றிய செயலாளர் கோபால கிருஷ்ணன் மற்றும் திரளானவர்கள், மருத்துவமனை வாயிலில் நுழையும் போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி னர். பின்னர் அவர்களிடம் புகார் மனு கொடுங்கள் நட வடிக்கை எடுக்கிறேன் என்று கூறியதை அடுத்து காவல்துறை யிடம் புகார் மனு கொடுத்து தற்காலிகமாக போராட்டத்தை கை விட்டனர்.