tamilnadu

img

குருதிக் கொடையாளர்களுக்கு பாராட்டு விழா

பொன்னமராவதி, நவ.5- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காமராஜ் நகர்  அப்துல் கலாம் எழுச்சி மன்றம் மற்றும் ஸ்ரீ பிரசன்னா இரத்த தான நண்பர்கள் சார்பில் குருதிக் கொடையாளர்களுக்கு  பாராட்டு விழா ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ.பிரசன்னா சரவணன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் அரசு மருத்துவர்கள் செந்தமிழ் செல்வி, அருண்குமார் குருதி கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டி சிறப்புறையாற்றினர். துர்கா மருத்துவ மனை தலைமை மருத்துவர் அழகேசன், கவிஞர் பெர்னாட் ஷா, தொழிலதிபர் வைத்திநாதன் செந்தில்குமார், மலேசியா வை சேர்ந்த டாக்டர் வெங்கடேசன் சங்கையா, ஸ்ரீராகவேந்திரா பவுண்டேசன் மெடிக்கல் சேர்மன் கருணாகரன், வட்டார கல்வி அலுவலர் ராஜா சந்திரன், அப்துல் கலாம் எழுச்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.