tamilnadu

img

ஞாபக அடுக்குகளின் அற்புத தருணங்களை கிளறி விடுவதே நல்ல கவிதை: ஐ.லியோனி பேச்சு

புதுக்கோட்டை, மார்ச் 17- ஞாபக அடுக்குகளில் மறைந்து கிடக்கும் அற்புத தருனங்களை கிளறி விடுவதே நல்ல கவிதை என்றார் பட்டி மன்றப் பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி. புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமையன்று ஆலங்குடி வெள்ளைச்சாமி எழுதிய ‘அப்பத்தா வின் கருக்கருவா’ கவிதைநூலை வெளி யீட்டு அவர் பேசியது:  பேச்சுத் திறமையும், இசைப் புலமை யும் ஒருங்கமைந்த ஆலங்குடி வெள்ளைச்சாமி பட்டிமன்றங்களில் சிறப்பான பங்களிப்பைச் செலுத்தி வருகிறார். பேச்சாளராக அறியப்பட்ட வெள்ளைச்சாமி ‘அப்பத்தாவின் கருக் கருவா’ தொகுப்பின் மூலமாக நல்ல  கவிஞராகவும் வெளிப்பட்டுள்ளார். நமது ஞாபக அடுக்குகளில் மறைந்து கிடக்கும் அற்பத தருணங்களை கிளறி விடுவதே நல்ல கவிதை. அப்படியான கவிதைகளை இந்தத் தொகுப்பில் நிறைய இடங்களில் தந்துள்ளார். இவர் எழுத்தியுள்ள ‘தாத்தாவின் கும்பா’ என்ற கவிதை அப்படியே எனது தாத்தா வையும் எங்கள் குடும்பத்தாரையும் வைத்து எழுதியதைப் போல பொருந்திப் போகிறது. எதிர்காலத்தில் இன்னும் சிறப்பான கவிதைகளைத் தரு வார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். வெளியீட்டு விழாவிற்கு எழுத்தாளர் நா.முத்துநிலவன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.மாதவன், மருத்துவர் எஸ்.ராமதாஸ், கல்வியாளர் குரு.தனசேகரன், எம்எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட ஒருங்கி ணைப்பாளர் ஆர்.ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிதையின் முதல்பிரதியை மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் இரா.சு.கவிதைப்பித்தன் பெற்றுக்கொண்டு வாழ்த்திப் பேசினார்.  நூல்குறித்து கவிஞர் தங்கம்மூர்த்தி, இயக்குனர் அமீர் அப்பாஸ், பேரா. தங்கரவிசங்கர், கவிஞர்கள் எம்.ஸ்டாலின் சரவணன், ராசி.பன்னீர்செல்வன், இரா. தனிக்கொடி, சி.ஆர்.மஞ்சுளா, ரமா ராம நாதன் ஆகியோர் பேசினர். முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர் எம். பொன்னம்மாள், முனைவர் மு.பால சுப்பிரமணியன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக தமுஎகச மாவட்டச் செயலாளர் சு.மதியழகன் வரவேற்க, மகா.சுந்தர் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை காசாவயல் கண்ணன் தொகுத்து வழங்கினார். திருவரங்குளம் ஊராட்சி ஒன்றி யக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் த.பழனிச்சாமி, அமுதா லியோனி, கிலோன மணி மொழி, தேவகோட்டை மகாராஜன், எஸ். பி.பாஸ்கர், தரணி ரமேசு, ஆதிராஜன், மு.கீதா, நேசன் மகதி, பீர்முகமது, என். தமிழரசன், புதுகை புதல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.