tamilnadu

கொரோனா நோயாளிகளுக்கு போதுமான படுக்கை, மருத்துவ வசதி: சிபிஎம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஆக.5-  புதுக்கோட்டை மாவட்டத்தில் கொ ரோனா நோயாளிகளுக்கு போது மான படுக்கை வசதி மற்றும் சிகிச்சை  அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வலியுறுத்தி உள்ளது. கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் எஸ்.சங்கர், ஏ.ராமை யன், மாவட்டக்குழு உறுப்பினர் சி.ஜீவானந்தம் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தி த்து அளித்துள்ள கோரிக்கை மனுவில்  தெரிவித்திருப்பதாவது: கறம்பக்குடியில் குடிநீர்த் தொட்டி யில் தவறிவிழுந்து உயிரிழந்த சிறு வர்கள் கிருத்திக்ரோஷன், அரவிந்த் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா  ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களின் பெற்றோ ருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். விவசாயிகளின் நலனைக்  கருத்தில்கொண்டு பயிர்க் காப்பீட்டு க்கான கால அளவை நீட்டிக்க வேண்டும்.

தேசிய வேலை உறுதித்  திட்டத்தில் சுழற்சி முறை இல்லாமல்  தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும். சட்டப்பூர்வ கூலி ரூ.256-ஐ  தொடர்ந்து வழங்க வேண்டும். கொரோனா நோய்ப் பரவல் தீவிர மாகி வரும் சூழலில் பரிசோதனை மையங்களை கிராமங்கள்தோறும் விரிவுபடுத்த வேண்டும். அதிக படுக்கை வசதியுடன் கொரோனா வார்டை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், கறம்பக்குடியில் உயிரி ழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு அர சின் சார்பில் இழப்பீடாக தலா ரூ.3 லட்சம் அடுத்த 15 தினங்களுக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தலா ரூ.10 லட்சம் குறித்த தங்களின் கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

ஒப்பந்த அடிப்படையில் துப்பு ரவுத் தொழிலாளர்களாக பணியாற்றி  வரும் சிறுவர்களின் பெற்றோர்க ளுக்கு நிரந்தரப் பணி வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும். கொரோனா நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடுதலாக புதுக்கோ ட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை, புதுக்கோட்டை மகளிர்  கலைக் கல்லூரி, குடுமியான்மலை,  ஆலங்குடி அரசு மருத்துவமனை களில் கொரோனா வார்டு மைய ங்களை ஏற்படுத்த நடவடிக்கை மே ற்கொள்ளப்படும். தற்பொழுது கொ ரோனா நோயாளிகளுக்கு 400 படுக்கை வசதிகள் தேவையாக உள்ளது. அதே நேரத்தில் 1000 படுக்கை வசதி கள் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்றார்.