புதுக்கோட்டை, டிச.7- சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி சென்றால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சி யர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளது: கனரக சரக்கு வாகனங்களான லாரி கள், இலகு ரக சரக்கு வாகனங்களான ஈச்சர், டாடா ஏஸ், தோஸ்த் மற்றும் மூன்று சக்கர அபே ஆட்டோ வாகனங்களில் பின் புறம் ஏற்றப்பட்டுள்ள பாரங்களின் மீதோ அல்லது பாரம் இல்லாத நேரங்களிலோ ஆட்களை எற்றி செல்வது மோட்டார் வாகன சட்டப்படி தவறானதாகும். இத னால் வாகனங்கள் எளிதில் விபத்துக் குள்ளாகவும், அவ்வாறு விபத்து ஏற்படும் போது உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பாக அமையும். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி மேற்குறிப்பிட்டுள்ள தவறினை செய்யும் வாகன ஓட்டுநர்களின் உரிமங்கள் 3 மாத காலத்திற்கு குறையாமல் தற்காலிக தடை செய்யப்படுவதுடன், மீண்டும் அதே தவ றினை செய்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவது மட்டுமல்லாமல், வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது நீதி மன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறையினருக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற தவறான முறையில் பய ணித்து விபத்து நிகழும் சூழ்நிலையில் உரிய இழப்பீடும் கிடைக்க பெறாது. எனவே பொதுமக்களும் சரக்கு வாக னங்களில் பயணம் செய்து உயிர் இழப்பு ஏற்படும் அபாயங்களில் சிக்கி கொள்வதை தவிர்த்து, முறையான பயணிகள் வாக னங்களையும் பொது போக்குவரத்து வாகனங்களையும் பயன்படுத்தி பாது காப்பான பயணம் செய்ய அறிவுறுத்தப் படுகிறது.