tamilnadu

img

ஊரடங்கு காலத்தில்  சாதித்த விவசாயி

அறந்தாங்கி, மே 16- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் சீகனிவயல் கிராமத்தில் சேகர் என்ற விவசாயி கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் தனித்திருந்து தனியே 1 ஏக்கர் விவசாயம் செய்து புதுரக நெல் 5477 என்ற விதையில் சாகுபடி செய்து 45 மூடை நெல் மகசூல் சாதனை படைத்தார். அவரை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக, சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் கரு.இராமநாதன், வாலிபர் சங்கம் பகத்சிங், சுர்ஜித். ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.