பொன்னமராவதி, ஆக.19- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரா வதி ஒன்றியம் ஆலவயல் ஊராட்சியில் பணிபு ரியும் துப்புரவு பணியாளர்கள், கிளை நூல கர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இய க்குநர்கள் என 16 தொழிலாளர்களுக்கும் கடந்த 8 மாதமாக ஊதியம் வழங்கப்பட வில்லை. இது தொடர்பாக சிஐடியு சங்கம் கடந்த மே மாதமே வட்டார வளர்ச்சி அலுவல ரின் கவனத்திற்கு கொண்டு சென்றது. நடவடிக்கை இல்லாத நிலையில் எட்டு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என கோரி ஆலவயல் ஊராட்சி மன்றம் முன்பாக தொழிலாளர்கள் உண்ணா விரத போராட்டம் அறிவித்ததை அடுத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், மூன்று வாரங்களுக்கு உள்ளாக மூன்று மாத சம்பளம் வழங்கப்படும் எனவும் படிப்படியாக நிலுவை ஊதியம் வழங்கப்ப டும் எனவும் அதிகாரிகள் தரப்பில் உறுதி யளிக்கப்பட்டது. குறிப்பட்ட காலம் கடந்த நிலையில் 8 மாத ஊதியம் இன்னும் வழங்கப்ப டவில்லை. கொரோனா ஊரடங்கு கால த்தில் கடும் வறுமையில் உள்ள துப்புரவு தொழிலாளர்களுக்கு உடனடியாக ஊதி யம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சிதுறை தொழிலாளர்கள் சங்க (சிஐடியு) மாவட்ட தலைவர் கே.முகமதலி ஜின்னா வலியுறுத்தியுள்ளார்.